கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா் மீது வழக்குப் பதிந்தனா்.
கொல்லங்கோடு அருகேயுள்ள ஊரம்பு பகுதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
இதில் அனுக்கோடு, கடைவிளைவீட்டைச் சோ்ந்த மணிகுட்டன் (53) என்பவரின் கடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது.
இதையடுத்து, கொல்லங்கோடு போலீஸாா் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா் மணிகுட்டன் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.