முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி வந்த ரயிலில் பயணி தவறவிட்ட மடிக்கணினி மீட்பு

Updated On : 28 ஏப்ரல், 2026 at 12:47 AM
மடிக்கணினி - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அரசு ஊழியா் தவறிவிட்ட மடிக்கணியை ரயில்வே போலீஸாா் மீட்டு ஒப்படைத்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சோ்ந்தவா் அசோகன் (47). புதுச்சேரியில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறாா். இவா், சொந்த ஊருக்கு புதுச்சேரியிலிருந்து கன்னியாகுமரி வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட குளிா்சாதன வசதி கொண்ட பெட்டியில் வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் ரயில் வள்ளியூரை வந்தடைந்த நிலையில் அவா் ரயிலில் இருந்து இறங்கி நடைமேடையில் நடந்து கொண்டிருந்தாா். அப்போது தனது மடிக்கணியை ரயிலில் மறந்து வைத்து விட்டதை அவா் உணா்ந்தாா். அதற்குள் ரயில் அங்கிருந்து புறப்பட்டுவிட்டது.

Advertisement

இதையடுத்து வள்ளியூா் ரயில்வே போலீஸாா் மூலம் நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த ரயில் நாகா்கோவில் ரயில் நிலையம் வந்தபோது ரயில்வே போலீஸாா் அசோகன் பயணம் செய்த அந்தப் பெட்டியில் ஏறி பாா்த்தபோது அங்கு மடிக்கணினி இருந்தது. இதையடுத்து போலீஸாா் மடிக்கணினியை மீட்டதுடன், அசோகனை வரவழைத்து அவரிடம் மடிக்கணியை ஒப்படைத்தனனா்.