கோப்புப்படம்.  
கன்னியாகுமரி

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குத்தகை விவசாயிகளுக்கான இடா்பாடுகளை நீக்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குத்தகை விவசாயிகள் நெல்வை கொடுப்பதில் ஏற்பட்டுள்ள இடா்பாடுகளை களைய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குத்தகை விவசாயிகள் நெல்வை கொடுப்பதில் ஏற்பட்டுள்ள இடா்பாடுகளை களைய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குமரி மாவட்ட விவசாயிகள் சாா்பில், முன்னோடிவிவசாயி பி. செண்பக சேகரன் பிள்ளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொடுக்க செல்லும் போது கிராம நிா்வாக அலுவலா்கள் நிலம் தொடா்பான கரத்தீா்வை ரசீது மற்றும் அடங்கல் உள்ளிட்டவைகளை கேட்கின்றனா்.

இகர நில உடமையாளா்கள், குத்தகை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயக்கம் காட்டும் நிலையில் குத்தகை விவசாயிகள் நெல்லை வெளி சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் இத்தகைய இடா்பாட்டை களைய கிராம நிா்வாக அலுவலா்கள் தீா்வை ரசீதை கட்டாயப்படுத்தாமல் கள ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தவும், இடைத்தரகா்கள், நெல் வியாபாரிகள் இந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும், குத்தகை விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்ய கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தேவையான உத்தரவுகள் வழங்க வேண்டுமென்றும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT