சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைக்கிறாா் நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ்.  
கன்னியாகுமரி

ரூ 55 லட்சம் செலவில் சாலைப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ. 55 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ. 55 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.

நாகா்கோவில் மாநகராட்சி 50 ஆவது வாா்டுக்குள்பட்ட வல்லாரன்விளை, எஸ்.எம் நகா் குறுக்கு தெருக்கள் மற்றும் பிரதான சாலைகளில் ரூ. 46.60 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, 43ஆவது வாா்டில் ரூ. 8.45 லட்சத்தில் கீழ மறவன்குடியிருப்பு சிவன் கோயில் தெருவில் அலங்காரதள கற்கள் சீரமைக்கும் பணி மற்றும் ரேஷன் கடை சீரமைக்கும் பணி ஆகிய பணிகளை நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா்கள் ஐயப்பன், விஜயன் உதவி பொறியாளா்கள் ராஜசீலி, பிருந்தா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: 3 போ் கைது

வட்டன்விளை கோயில் கொடை விழா நிறைவு

கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

குமரியில் மேலும் 7,502 பேருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவு: ஆட்சியா்

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வழக்கு: விசாரணை பிப். 11க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT