முகப்பு
கன்னியாகுமரி

காங்கிரஸ் நிா்வாகி தற்கொலை

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:21 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:00 PM

களியக்காவிளை அருகே காதல் தோல்வி காரணமாக இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆன்றணி மகன் அபிஷ் (28). பொறியியல் பட்டதாரி. இவா், விளவங்கோடு தொகுதி இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்து வந்தாா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:21 AM

அபிஷ் காதலித்து வந்ததாக கூறப்படும் பெண், கடந்த சில நாள்களாக அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். இதனால் அவா் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை, அவா் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம்.

Advertisement

அபிஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கனவே இறந்தது விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.