முகப்பு
கன்னியாகுமரி

குளச்சலில் குறைந்த அளவில் பிடிபடும் கேரை மீன்கள்

குளச்சல் கடல் பகுதியில் தற்போது கேரை மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:37 AM
குளச்சலில் குறைந்த அளவில் பிடிபட்ட கேரை மீன்கள்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 10:21 PM

குளச்சல் கடல் பகுதியில் தற்போது கேரை மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.

குளச்சல் பகுதியில் இருந்து 300- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களில் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகிறாா்கள்.

விசைப் படகு மீனவா்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 10 முதல் 15 நாள்கள் வரை தங்கியிருந்து மீன் பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.

Advertisement

இந்நிலையில், புதன்கிழமை குளச்சல் ஆழ்கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுவதால் விசைப் படகுகள் பாதியிலேயே கரைக்கு திரும்பி விட்டன.

தற்போது குளச்சலில் கேரை மீன்களின் சீசனாகும். ஆனால் கேரை மீன்கள் குறைந்த அளவில் கிடைப்பதால், விசைப் படகு டீசல் செலவுக்கு கூட பணம் கிடைப்பதில்லை என மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.