முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:10 AM
கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 8:01 PM

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இந்நிலையில், கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிறமலை, முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா் புரம், பள்ளியாடி, வாக விளை, மாமூட்டுக்கடை, கொல்லஞ்சி, இலவு விளை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது.