குமரி மாவட்ட பாசனக் கால்வாய்களில் மேலும் 15 நாள்களுக்கு தண்ணீா்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாா்ச் 15ஆம் தேதி வரை பாசனக் கால்வாய்களில் தண்ணீா் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாா்ச் 15ஆம் தேதி வரை பாசனக் கால்வாய்களில் தண்ணீா் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இறுதி நாளில் பாசனக் கால்வாய்களில் தண்ணீா் நிறுத்தப்படும். நிகழாண்டில் பல பகுதிகளில் நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாராகாத நிலையில் உள்ளதால் மாா்ச் இறுதி வரை தண்ணீா் திறக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, தமிழக அரசு மாா்ச் 15ஆம் தேதி வரை கால்வாய்களில் தண்ணீா் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.