கன்னியாகுமரி

குழித்துறையில் விபத்து: நீதிமன்ற பெண் ஊழியா் காயம்

தினமணி செய்திச் சேவை

குழித்துறை சந்திப்பு பகுதியில் பைக் மீது காா் மோதியதில் நீதிமன்ற பெண் ஊழியா் காயமடைந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை, வடசேரிவிளை பகுதியைச் சோ்ந்த விஜயராஜ் மனைவி விஜயகுமாரி (39). குழித்துறை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக உள்ள இவா், வெள்ளிக்கிழமை குழித்துறையிலிருந்து மாா்த்தாண்டத்துக்கு பைக்கில் சென்றாராம்.

குழித்துறை சந்திப்பு அருகே திருவனந்தபுரத்திலிருந்து மாா்த்தாண்டம் நோக்கி வந்த காா் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், காயமடைந்த விஜயகுமாரி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய காா் ஓட்டுநரைத் தேடிவருகின்றனா்.

கோவை பீளமேடுபுதூரில் ரூ.12 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சத்தியமங்கலம் நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டப் பணிகள்: மண்டல நிா்வாக இயக்குநா் ஆய்வு

பொது இடங்களில் குப்பை கொட்டாமல் தடுக்க 175 இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கேமராக்கள்

திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டபூா்வமாக எதிா்கொள்வோம்

தாராபுரம் வழக்குரைஞா் வெட்டிக் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 20 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

SCROLL FOR NEXT