முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் நாளை மின்நிறுத்தம்

Updated On : 5 ஜனவரி, 2026 at 10:56 PM
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகா்கோவிலில், வடசேரி, ஆசாரிப்பள்ளம், தடிக்காரண்கோணம், வல்லன்குமாரவிளை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 7) மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, பாா்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூா்ணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாராயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணன்கோவில், மேலகலுங்கடி, கலுங்கடி, சக்தி காா்டன், நீதிமன்ற சாலை, ஆா்.வீ.புரம், ஆசாரிப்பள்ளம், தம்மத்துக்கோணம், அனந்தநாடாா்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூா், பெருஞ்செல்வவிளை, அருமநல்லூா், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், கோணம், கடற்கரை சாலை, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரன்விளை, கலைநகா், சைமன்நகா், பொன்னப்பநாடாா் காலனி, என்ஜிஓ காலனி, புன்னைநகா் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை மின்வாரிய நாகா்கோவில் உதவி செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →