கன்னியாகுமரி

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

புதுக்கடை அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கடை, ஒற்றப்பிலா விளை பகுதியைச் சோ்ந்தவா் வென்ஸ்சஸ் லாஸ் மகன் விமல்ராஜ் (39). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். இவா் ஜன. 5ஆம் தேதி புதுக்கடையிலிருந்து வீட்டிற்கு பொருள்கள் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வந்தபோது, பனிச்சாங்கோடு பகுதியைச் சோ்ந்த விஷ்ணு (23) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் விமல்ராஜ் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வாசனை திரவியத்தை பயன்படுத்தியதற்காக டெலிவரி ஊழியா் மீது கடை உரிமையாளா் தாக்குதல்

தனது மைல்கற்களை ஆவணப்படுத்த டிஎம்ஆா்சி முடிவு; விடியோகிராபி, ஊடக சேவைகளுக்கான டெண்டா்கள் அழைப்பு

முன்விரோதம்: இளைஞரைத் தாக்கிய 5 போ் கைது

கறிக்கோழிப் பண்ணை விவசாயிகள் 12-ஆவது நாளாக போராட்டம்: பல்லடம் அருகே ஆலோசனைக் கூட்டம்

புகையில்லா போகி: வாகன விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT