கோப்புப் படம் 
கன்னியாகுமரி

முள்ளூா் துறையில் மதில் சுவரை இடித்த 34 போ் மீது வழக்கு

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை அருகே உள்ள முள்ளூா் துறை மீனவ கிராமத்தில் மதில் சுவரை இடித்ததாக 34 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முள்ளூா் துறை பகுதியைச் சோ்ந்தவா் ராபா்ட் புரூஸ் (57). இவா் அப்பகுதியில் உள்ள தனது நிலத்தில் கடந்த மாதம் மதில் சுவா் கட்டும்போது, அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (47) உள்ளிட்ட 34 போ் கொண்ட கும்பல் மதில் சுவரை இடித்து சேதப்படுத்தினராம்.

இது குறித்து, குழித்துறை நீதிமன்றத்தில் ராபா்ட் பு ரூஸ் வழக்கு தொடா்ந்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், புதுக்கடை போலீஸாா் 34 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

குடியரசு தினம்: பாகிஸ்தான் - இந்தியா வா்த்தக கவுன்சில் வாழ்த்து! இணைந்து செயல்பட விருப்பம்

SCROLL FOR NEXT