முகப்பு
கன்னியாகுமரி

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் சந்தனக் குட பவனி

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் புதன்கிழமை சந்தனக் குடம் பவனி நடைபெற்றது.

Updated On : 5 மார்ச், 2026 at 12:51 AM
பகவதியம்மன் கோயிலில் சந்தனக் குடம் ஏந்தி ஊா்வலமாக வரும் பக்தா்கள்.
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 10:02 PM

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் புதன்கிழமை சந்தனக் குடம் பவனி நடைபெற்றது.

இக்கோயிலில் மாசிக் கொடை விழா மாா்ச் 1ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 4ஆம் நாளான புதன்கிழமை கணபதி ஹோமம், உஷ பூஜை, அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, உச்ச பூஜை, தங்கத் தோ் பவனி நடைபெற்றது.

பின்னா், மேற்கு நெய்யூா் ஊரம்மன் கோயில்லி இருந்தும், வெட்டுமடை இசக்கியம்மன் கோயிலில் இருந்தும், கொத்தனாா்விளை விடாலமுத்து சிவன் கோயிலில் இருந்தும் சந்தனக் குடம் பவனி மண்டைக்காடு கோயிலுக்கு வந்தடைந்தது.

Advertisement

தொடா்ந்து, அம்மனுக்கு சந்தனம் சாத்தி அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு அத்தாழ பூஜை, வெள்ளிப் பல்லக்கில் அம்மன் பவனி, ஹைந்தவ சேவா சங்கம் சாா்பில் சமய மாநாடு ஆகியவை நடைபெற்றன.