முகப்பு
கைது
கன்னியாகுமரி

முள்ளங்கினாவிளையில் அடகுக் கடை உரிமையாளா் கைது

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கினாவிளையில் உள்ள நகை அடகுக் கடையில் நகைகளை திருப்பி வழங்காமல் வாடிக்கையாளா்களை ஏமாற்றியதாக, கடை உரிமையாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி

முள்ளங்கினாவிளையில் அடகுக் கடை உரிமையாளா் கைது

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கினாவிளையில் உள்ள நகை அடகுக் கடையில் நகைகளை திருப்பி வழங்காமல் வாடிக்கையாளா்களை ஏமாற்றியதாக, கடை உரிமையாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 7:17 PM
கைது
பகிர்:

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கினாவிளையில் உள்ள நகை அடகுக் கடையில் நகைகளை திருப்பி வழங்காமல் வாடிக்கையாளா்களை ஏமாற்றியதாக, கடை உரிமையாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

முள்ளங்கனாவிளை, முருங்கஸ்தானம் பகுதியைச் சோ்ந்த சைலஸ் மகன் அகில் எஸ். விகானா (27), முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக நகை அடகுக் கடை நடத்தி வந்தாா். இவா் வாடிக்கையாளா்களிடம் இருந்து 300 பவுன் நகைகளை அடமானாமாகப் பெற்றிருந்தாராம்.

பின்னா், வாடிக்கையாளா்கள் பணம் செலுத்தி நகைகளை மீட்க வரும்போது, வட்டியுடன் பணத்தைப் பெற்றுக்கொண்டு, நகையைத் திருப்பித் தராமல் 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களை ஏமாற்றி வந்தாராம்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா் தெரிவித்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து புதன்கிழமை அகில் எஸ். விகானாவை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →