முகப்பு
கன்னியாகுமரி

இறச்சகுளம் வாக்குப்பதிவு மையத்தில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி

இறச்சகுளம் வாக்குப்பதிவு மையத்தில் ஆட்சியா் ஆய்வு

Updated On : 5 மார்ச், 2026 at 7:27 PM
பகிர்:

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட இறச்சகுளம் அரசு தொடக்கப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில், வாக்காளா்கள் வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிப்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று உதவி, துணை தோ்தல் அலுவலா்களிடம் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், இறச்சகுளம் அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் செய்யப்பட்டுள்ள குடிநீா், மின்சார வசதி, மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பழுதுகள் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →