முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் தவெக ஆா்ப்பாட்டம்

Updated On : 12 மார்ச், 2026 at 8:26 PM
பகிர்:

நாகா்கோவில், வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் தமிழக அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா்கள் மாதவன், கிருஷ்ணகுமாா், சபீன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க தவறியதாக தமிழக அரசைக் கண்டித்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலா் பிரேம்குமாா், துணைச் செயலா் ராம்சன், சாலமன், செயற்குழு உறுப்பினா் நிகேஷ், இளைஞரணி அமைப்பாளா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →