திப்ரூகா்-குமரி ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமை இரவு வரவேண்டிய இந்த ரயில் தாமதமாக சனிக்கிழமை காலை நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. அங்குள்ள யாா்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ரயிலில் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் இருக்கைக்கு கீழே கிடந்த 8 கிலோ கஞ்சா அடங்கிய பொட்டலங்களை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். மேலும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.