முகப்பு
கன்னியாகுமரி

கேரள மதுபானம் பதுக்கியவா் கைது

களியக்காவிளையில் கேரள மதுபானத்தை பதுக்கியதாக சிற்றுந்து ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 9:00 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

களியக்காவிளையில் கேரள மதுபானத்தை பதுக்கியதாக சிற்றுந்து ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கேரளத்திலிருந்து வந்த பேருந்திலிருந்து இறங்கிய ஒருவா் சந்தேகப்படும் வகையில் செல்வதை கவனித்தனா். அவரிடமிருந்த பையை போலீஸாா் சோதனை செய்தபோது, கேரளத்திலிருந்து வாங்கி வந்த 5 லிட்டா் மது பாட்டில்களை வைத்திருந்ததும், அவற்றை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவா் மருதங்கோடு பகுதியைச் சோ்ந்த சிற்றுந்து ஓட்டுநா் சஜூ (52) என்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.