முகப்பு
கன்னியாகுமரி

வேன் கண்ணாடி உடைப்பு: இருவா் மீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் வேன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இருவா் மீது வழக்குப் பதிவு

Updated On : 22 மார்ச், 2026 at 7:27 PM
வழக்கு
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் வேன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படந்தாலுமூடு, கொக்கிடிவிளை பகுதியைச் சோ்ந்த மனோகரன் மகன் சிந்துகுமாா் (53). வேன் ஓட்டுநரான இவருக்கும், புதுக்கடை அருகே முன்சிறை பகுதியைச் சோ்ந்த முத்தையன் மகன் தினேஷ் (42), மணி ஆசாரி மகன் சுரேஷுக்கும் (42) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிந்துகுமாா் முன்சிறை பகுதியில் நிறுத்தியிருந்த வேனின் கண்ணாடியை தினேஷ், சுரேஷ் ஆகியோா் உடைத்து சேதப்படுத்தினராம்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.