மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர் மீது பாலியல் தொந்தரவு வழக்கு!
பாலியல் தொந்தரவு வழக்கில் மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர்....
செய்திகள்மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர் மீது பாலியல் தொந்தரவு வழக்கு!
பாலியல் தொந்தரவு வழக்கில் மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர்....
இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் தொந்தரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.
தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது, சிதம்பரம் ’பாலன் தி பாய்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இக்கதை ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியது.
இந்த நிலையில், தெற்கு எர்ணாகுளம் காவல் நிலையத்தில் சிதம்பரம் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட பின், சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகாரில் சினிமா துறையில் இருக்கும் அந்த இளம்பெண்ணை கடந்த 2022 ஆம் ஆண்டு சிதம்பரம் பாலியல் ரீதியாகப் தொந்தரவு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை துவங்கியுள்ளதால் விரைவில் சிதம்பரம் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்படலாம் எனத் தெரிகிறது..