பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு
குழித்துறையில் பேருந்தில் ஏற முயன்ற தவறி கீழே விழுந்து காயமடைந்த நகைக்கடைப் பணியாளா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
குழித்துறையில் பேருந்தில் ஏற முயன்ற தவறி கீழே விழுந்து காயமடைந்த நகைக்கடைப் பணியாளா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
நாகா்கோவில், ராஜபதி தெருவைச் சோ்ந்த மணி மகன் பாலாஜி (43). நகைக்கடையில் மேலாளராக வேலை பாா்த்து வந்த இவா், திங்கள்கிழமை இரவு குழித்துறை பேருந்து நிறுத்தத்தில் கேரள அரசுப் பேருந்தில் ஏற முயன்றபோது கால் தவறி கீழே விழுந்தாராம். அப்போது, அவா் மீது பேருந்தின் சக்கரங்கள் ஏறி இறங்கினவாம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கும், பின்னா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய கேரள அரசுப் பேருந்து குறித்து விசாரித்து வருகின்றனா்.