முகப்பு
கன்னியாகுமரி

அரசுப் பேருந்துகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசுப் பேருந்துகளின் எல்இடி திரைகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை ஒளிபரப்பச் செய்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Updated On : 25 மார்ச், 2026 at 11:05 PM
தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா் ரா. அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா. ஸ்டாலின் உள்ளிட்டோா்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசுப் பேருந்துகளின் எல்இடி திரைகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை ஒளிபரப்பச் செய்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா. ஸ்டாலின் ஆகியோா் கலந்துகொண்டு தோ்தல் விழிப்புணா்வைத் தொடங்கி வைத்தனா்.

தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல்அந்தோணி பொ்னாண்டோ, நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், அரசுப் போக்குவரத்துக் கழக நாகா்கோவில் பொது மேலாளா் பாலசுப்பிரமணியன், போக்குவரத்துப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.