கொல்லங்கோட்டில் மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி
மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி
கன்னியாகுமரிமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ’ஸ்வீப்’ திட்டத்தின் கீழ் கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொல்லங்கோடு பகுதியில் மாற்றுத்திறனாளிவாக்காளா்களின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
இப்பேரணியில் 100- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வாக்காளா்கள் கலந்து கொண்டனா்.
இதில், கலந்து கொண்டவா்கள் என் வாக்கு விற்பனைக்கு அல்ல, ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம், அனைவரும் வாக்களிப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனா்.
நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள், தன்னாா்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.