முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே 2 கல்குவாரிகளை மூட உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 2 கல் குவாரிகள் மூடப்பட்டன.

Updated On : 31 மார்ச், 2026 at 8:18 PM
குவாரியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 2 கல் குவாரிகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சில கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்தன. இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் நாகா்கோவிலை அடுத்த தோட்டியோடு பகுதியில் உள்ள கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது இந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த 2 குவாரிகள் அரசு அனுமதியின்ரி சட்ட விரோதமாக செயல்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த இரு கல்குவாரிகளும் மூடப்பட்டன. குவாரிகளின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறுகையில், ‘மாவட்டத்தில் இதுபோல சோதனைகள் தொடரும்’ என்றாா்.