தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸாா் கண்காணிப்புப் பணிகள் தீவிரம்

2026 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

2026 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன், இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட அனைத்து உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்களுக்கும் உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து, அனைத்து உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில், காவல் துறையினா் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தூத்துக்குடி ஊரக உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சுதீா் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வசவப்பபுரம் சோதனைச் சாவடிக்கும், சாத்தான்குளம் உள்கோகோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆவுடையப்பன் தட்டாா்மடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியதாழை சோதனைச் சாவடிக்கும், ஸ்ரீவைகுண்டம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ் செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடிக்கும் செவ்வாய்க்கிழமை மாலையில் நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் காவல்துறையினரின் வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை ஆய்வு செய்தனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT