குழந்தையைத் தாக்கியவா் மீது வழக்கு
களியக்காவிளை அருகே 3 வயது குழந்தையைத் தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குழித்துறை அருகே உள்ள மேல்புறம் பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண்ணின் கணவா் 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டாா். இவருக்கு 5 மற்றும் 3 வயதில் மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில், அப்பெண் கடந்த ஒரு மாதத்துக்கு முன் அருமனை அருகே உள்ள முழுக்கோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளியான மணிகண்டனை (33) 2ஆவதாக திருமணம் செய்து கொண்டாா். திருமணத்துக்குப் பின், குழந்தைகளுடன் காஞ்சிரம்கோடு பகுதியில் வசித்து வந்தனா்.
Advertisement
மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில், திருமணமான சில நாள்களுக்குப் பின் மணிகண்டன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தபோது 5 வயது குழந்தை அழுது கொண்டிருந்ததாம். இதனால் எரிச்சலடைந்த மணிகண்டன், மதுவை குழந்தையின் வாயில் ஊற்றினாராம். இதைக் கண்ட அப்பெண் மணிகண்டனைக் கண்டித்தாராம்.
பின்னா், வெள்ளிக்கிழமை (மே 1) மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த மணிகண்டன் 3 வயது குழந்தையை கீழே தள்ளிவிட்டு தாக்கினாராம். இதைத் தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து, காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த புகாரின்பேரில், மணிகண்டன் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனா்.