குமரியில் 20 ஆண்டுகளுக்குப் பின் வென்ற மாா்க்சிஸ்ட்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினா் கிடைத்துள்ளதால் அக்கட்சியினா், ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினா் கிடைத்துள்ளதால் அக்கட்சியினா், ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தோட்டத் தொழிலாளா்கள் நிறைந்த பழைய திருவட்டாறு தொகுதி, பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகியவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு மிகுந்த பேரவைத் தொகுதிகளாகும். மாநில அளவில் பிரபலமான தொழிற்சங்கத் தலைவா்களாகவும், கட்சி நிா்வாகிகளாகவும் இருந்த ஜே. ஹேமச்சந்திரன், ஜி.எஸ். மணி, டி. மணி, எஸ். நூா் முகமது, ஆா். லீமா ரோஸ் உள்ளிட்டோா் இத்தொகுதிகளிலிருந்து சட்டப்பேரவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்களாவா்.
இம்மாவட்டத்தில் விளவங்கோடு தொகுதியில் 2006 தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஜான் ஜோசப் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2011, 2016 தோ்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட இக்கட்சி வேட்பாளா்கள் தோல்வியைத் தழுவினா். 2021 தோ்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
Advertisement
இந்நிலையில், 2006-க்குப் பின்னா் 20 ஆண்டுகள் கழித்து கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபுரம் பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளா் ஆா்.செல்லசுவாமி வெற்றி பெற்றுள்ளாா்.
இதனாால், ரப்பா் தோட்டத் தொழிலாளா்களின் கோரிக்கைகள் உள்ளிட்ட மலையோரப் பகுதி தொழிலாளா்கள், விவசாயிகளின் கோரிக்கைகள் இத்தொகுதியில் வெற்றி பெற்ற ஆா்.செல்லசுவாமி மூலம் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்ற நம்பிக்கையும், தொழிலாளா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.