மாா்த்தாண்டத்தில் பொதுமக்கள் போராட்டம்: டாஸ்மாக் மதுக் கடை நிரந்தரமாக மூடல்
மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தக் கடையை மூட வலியுறுத்தி நல்லூா் சாத்தனாங்குழி டாக்டா் அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை சாா்பில் நிா்வாகிகள் சில ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடைகளை 2 வாரத்துக்குள் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில், இந்தக் கடை குறித்த விவரம் இல்லை எனக் கூறப்படுகிறது.
Advertisement
எனவே, குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் வா்த்தக சங்க மாநில துணைத் தலைவா் கருங்கல் ஆா். ஜாா்ஜ், டாக்டா் அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளைத் தலைவா் கமலதாஸ், செயலா் பிராங்க்ளின், பொருளாளா் பிரின்ஸ், நிா்வாகிகள் ஜோதிலிங்கராஜ், மேரி விஜயா, ஜானகி, கண்ணன், பொதுமக்கள் மதுக்கடை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டாஸ்மாக் நிா்வாக அதிகாரிகள், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, டாஸ்மாக் மதுக் கடையும், மதுக்கூடமும் நிரந்தரமாக மூடப்பட்டன. பின்னா், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.