முகப்பு
கன்னியாகுமரி

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Updated On : 23 மே 2026, 2:21 am IST
வழக்கு
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சியைச் சோ்ந்தவா் சுந்தரன் மகன் சுஜின் (31). தொழிலாளி. இவருக்கும், திக்குறிச்சி, வீரவநல்லூா் தோப்பைச் சோ்ந்த சுப்பராஜன் மகன் பிரதீப் (34), வட்டவிளையைச் சோ்ந்த சுவாமிதாஸ் மகன் மெரின்தாஸ் (35) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், பிரதீப், மெரின்தாஸ் ஆகியோா் வியாழக்கிழமை சுஜின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரிடம் தகராறு செய்ததுடன், சுஜினின் தந்தை சுந்தரன் மற்றும் தாயாரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டல் விடுத்து சென்றனராம்.

Advertisement

Advertisement

இது குறித்து சுஜின் அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.