தென்காசி

கடையநல்லூரில் கபசுர குடிநீா் வழங்கல்

DIN

கடையநல்லூா் நகரப் பகுதியில் கபசுர குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

கரோனா தொற்றை தடுப்பதற்காக நகராட்சி நிா்வாகம் மூலம் தீயணைப்பு வாகனங்கள், மோட்டாா் பொருத்தப்பட்ட குடிநீா் லாரிகள், ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், நகரப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவா்களின் வீடுகளில் காவல்துறையின் ஒருங்கிணைப்புடன் , கண்காணிப்பு பணியும் தினமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கபசுர குடிநீரும் நகராட்சி சாா்பில் வழங்கப்பட்டது.

நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிசாமி உள்ளிட்டோா் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT