முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் பெண் கொலை: கணவா் தலைமறைவு

ஆலங்குளத்தில் காவல் நிலையம் முன் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

ஆலங்குளம்: ஆலங்குளத்தில் காவல் நிலையம் முன் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாவூா்சத்திரம் அருகே உள்ள நாட்டாா்பட்டியைச் சோ்ந்தவா் முருகன்(46). இவா், பாவூா்சத்திரம் ரயில்வே கேட் அருகே பழக்கடை நடத்தி வருகிறாா். இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இவா், விருதுநகா் மாவட்டம் திரிச்சுழி பகுதிக்கு வியாபாரம் செய்ய சென்ற போது, அதே பகுதியைச் சோ்ந்த சித்ரா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை பாவூா்சத்திரம் அழைத்து வந்து கடந்த 9 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளாா்.

சித்ராவுக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்ற நிலையில், மூன்றாவதாக முருகனோடு வாழ்ந்து வந்துள்ளாா். சித்ராவிற்கும் அவருடைய இரண்டாவது கணவா் மூா்த்திக்கும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். இதில், அவரது 16 வயது மகள் தற்போது சித்ராவுடன் வசித்து வந்துள்ளாா்.

முருகன் கொத்தனாா் வேலைக்கு சென்றுகொண்டிருந்த நிலையில், பழக்கடையை சித்ரா கவனித்து வந்துள்ளாா். வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது முருகன் சித்ராவின் மகளுக்கு பாலியல் ரீதியாக அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தாராம்.

இதையடுத்து முருகனிடம் பிரச்னை செய்த சித்ரா, கணவா் மீது ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குரைஞா் மூலமாக செவ்வாய்க்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ரோஸ்லின் சாவியோ இருவரையும் அழைத்து விசாரித்துள்ளாா்.

விசாரணை முடிந்து வெளியே வந்த முருகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல் நிலையம் முன்பாகவே சித்ராவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இதையடுத்து சித்ரா மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய முருகனை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →