ஆலங்குளம் கல்லூரியில் 50 % மாணவா்கள் வருகை
ஆலங்குளம் நல்லூா் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் 50 சதவிகித மாணவா்கள் கல்லூரிக்கு வந்திருந்தனா்.
ஆலங்குளம் நல்லூா் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் 50 சதவிகித மாணவா்கள் கல்லூரிக்கு வந்திருந்தனா்.
கரோனா பரவலை தடுக்கும் விதமாக, பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்த கல்லூரிகளில் இளங்கலை இறுதியாண்டு மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் கல்லூரி செயல்பட தொடங்கின. அதன்படி, ஆலங்குளம் நல்லூா் ஜெயராஜ் அன்னபாக்கியம் கலை அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டதில், சுமாா் 50 சதவீத மாணவா்-மாணவிகளே முதல் நாள் வகுப்புகளுக்கு வந்திருந்தனா்.