புளியங்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மறியல்
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் முத்துப்பாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கணபதி , நகரச் செயலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் வேலு வரவேற்றாா்.
தங்கவேலு , சுப்பையா, சித்திரபுத்திரன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.