தென்காசி

ராயகிரியில் மறியல் போராட்டம்

DIN

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கோரி, ராயகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டச் செயலா் காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தாா். ராயகிரி நகரச் செயலா் சமுத்திரம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சமுத்திரகனி, மாவட்டக் குழு கந்தம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலக் குழு உறுப்பினா் போஸ், மாவட்டப் பொருளாளா் சுப்பையா, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் தங்கவேலு, கூடலூா் விவசாய சங்கத் தலைவா் சித்திரபுத்திரன், செயலா் சிவஞானபாண்டியன் உள்ளிட்டோா் பேசினா். மறியலில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்ளிட்ட 42 பேரை சிவகிரி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT