முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட பூமிபூஜை

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூமிபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூமிபூஜை விழா.
பகிர்:

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூமிபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 11.11 ஏக்கர் பரப்பளவில் ரூ 119 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவில் அதிமுக மாவட்ட செயலர்கள் செல்வமோகன் தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ..கிருஷ்ணமுரளி, மாவட்ட ஆட்சியர் கீ.சு.சமீரன்,மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.