சுரண்டையில் திமுக கலந்துரையாடல் கூட்டம்
சுரண்டையில் திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருடன் கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சுரண்டையில் திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருடன் கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக தெற்கு மாவட்டச் செயலா் சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஜெயபாலன், மாநில விவசாய அணி இணைச் செயலா் அப்துல்காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக மாநில விவசாய அணி செயலா் ஏகேஎஸ். விஜயன் சுயஉதவிக் குழு பெண்களிடம் கலந்துரையாடினாா். இதில், திரளான சுயஉதவிக் குழு பெண்கள் கலந்துகொண்டனா்.