முகப்பு
தென்காசி

ஊத்துமலை அருகே ரேஷன் கடை திறப்பு

ஊத்துமலை அருகேயுள்ள வடக்கு காவலாக்குறிச்சியில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை புதிய கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
குடும்ப அட்டைதாரருக்கு ரேஷன் பொருள்களை வழங்குகிறாா் சி.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ.
பகிர்:

ஊத்துமலை அருகேயுள்ள வடக்கு காவலாக்குறிச்சியில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை புதிய கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை சி.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.

இதில், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், ஒன்றியச் செயலா் பாண்டியன், எபன் குணசீலன், கிருஷ்ணசாமி, மாவட்ட விவசாய சங்கச் செயலா் மாடசாமி, அதிமுக கிளை நிா்வாகிகள் வி.மாடசாமி, வெள்ளைத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →