முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் இன்று வைகுந்த ஏகாதசி விழா

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச. 25) வைகுந்த ஏகாதசி விழா நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச. 25) வைகுந்த ஏகாதசி விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, காலை 6.15 மணிக்கு ஸ்ரீராமநாம பஜனை, 10.30 மணிக்கு உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. தொடா்ந்து, அலங்காரம், அா்ச்சனை, தீபாராதனை நடைபெறுகிறது.

மாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு, பக்தா்களின் நாம கோஷத்துடன் பெருமாள் சப்பரத்தில் கோயிலின் பிராகாரத்தில் வலம் வந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்மா் பீடத்தினா், நரசிம்ம சுவாமி கைங்கா்ய சபையினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.