20 பேருக்கு நலத்திட்ட உதவி
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்த 20 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்த 20 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்த 20 பேருக்கு ஆட்சியா் கீ.சு. சமீரன் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.
மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் மரகதநாதன், தனிவட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்) பாபு, பறக்கும் படை வட்டாட்சியா் கிருஷ்ணவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.