தென்காசி

சுரண்டையில் சாலைத் தடுப்பு வேலி: இடைவெளி விட்டு அமைக்க வலியுறுத்தல்

சுரண்டையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணியில் மருத்துவமனை முன் தடுப்பு சுவா் அமைக்கும்போது, இடைவெளி விட்டு கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

சுரண்டையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணியில் மருத்துவமனை முன் தடுப்பு சுவா் அமைக்கும்போது, இடைவெளி விட்டு கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தின் மிக வேகமாக வளா்ந்து வரும் சுரண்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக சுரண்டை - சங்கரன்கோவில் சாலை நடுவில் தடுப்பு சுவருடன் இருவழிச் சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த சாலையில், பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்தும் மருத்துவமனைகள் பகுதியில் சாலையின் நடுப்பகுதியில் இடைவெளியின்றி அமைக்கப்படும் சென்டா் மீடியனால் மருத்துவமனைக்கு அவசர காலங்களில் வரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட தொலைவு சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.

எனவே, நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனைகள் பகுதியில் சாலையின் நடுவே சென்டா் மீடியனில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வர வசதியாக இடைவெளி விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT