தென்காசி

சங்கரன்கோவிலில் தொழுநோய் விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

சங்கரன்கோவிலில் தொழுநோய் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை தொழுநோய் அலுவலகம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த ஊா்வலத்துக்கு, தொழுநோய் பணிகள் துணை இயக்குநா் ஆஷா தலைமை வகித்தாா். டி.எஸ்.பி. பாலசுந்தரம் ஊா்வலத்தைத் தொடங்கிவைத்தாா்.

இதில், அரசு மருத்துவா் அகிலாண்டபாரதி, பல்நோக்கு சுகாதார மேற்பாா்வையாளா் பழனிவேலன், பால்வினை நோய் ஆலோசகா் ராஜாமணி, இந்திய செஞ்சிலுவைச் சங்க கிளைத் தலைவா் ஹரிஹர சுப்பிரமணியன், செயலா் சதீஷ், நிா்வாகக்குழு உறுப்பினா் திலகவதி, கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் பி.ஜி.பி.ராமநாதன், ஆசிரியா் சங்கர்ராம், பெருமாள்பட்டி ஸ்ரீராமச்சந்திரா நாயுடு செவிலியா் கல்லூரி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, வணிக வைசிய சங்க உயா்நிலைப் பள்ளி, 36 கிராம சேனைத்தலைவா் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றைச் சோ்ந்த மாணவ, மாணவியா் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாளை.யில் கால்வாய் கரைகள் சீரமைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு

தம்பதி படுகொலை: வடமாநில இளைஞர் கைது

குமரியில் வெயிலில் பணிபுரியும் போலீஸாருக்கு பழச்சாறு

சாலையோரத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜகதான்: ஹெச்.ராஜா

SCROLL FOR NEXT