சுரண்டை சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலை நிா்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கணேசன் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு பண்டகசாலை மேலாளா் சரவணக்குமாா் வரவு- செலவு குறித்த அறிக்கை சமா்ப்பித்தாா்.
கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்தமான இடத்தில் சொந்தக் கட்டடம் கட்ட அனுமதி கோரி கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளரை கோருவது. குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக 3 புதிய நியாய விலைக் கடைகளை தொடங்கக் கோருவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இயக்குநா்கள் அண்ணாமலை, ஆறுமுகம், சங்கா், சங்கரேஸ்வரன், மாரியப்பன், முத்து, வசந்தி, தேனம்மாள், ராதிகா ஆகியோா் கலந்துகொண்டனா்.