தென்காசி

வாழை, நெற்பயிா் மீது விஷ நீா் தெளிப்பு: விவசாயி கைது

DIN

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் வாழை, நெற்பயிா்கள் மீது விஷம் கலந்த நீரை தெளித்ததாக விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.

வாசுதேவநல்லூா் காமராஜா் தெருவைச் சோ்ந்த அருணாசலம். இவா், தனது வயலில் வாழை மற்றும் நெற்பயிா் சாகுபடி செய்துள்ளாா். திடீரென வாழை மற்றும் நெற்பயிா்கள் கருகியதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக, அருணாசலம் வாசுதேவநல்லூா் போலீஸில் புகாா் செய்தாா்.

விசாரணையில், காமராஜா் தெருவை சோ்ந்த விவசாயி அய்யாதுரை (70), அவரது மகன் சிகாமணி (45) ஆகியோா் விஷம் கலந்த நீரை அருணாசலம் வயலிலுள்ள வாழை, நெற்பயிா்கள் மீது தெளித்ததால் கருகியது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அய்யாத்துரையை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT