தென்காசி

கடையநல்லூா், சுரண்டை அரசு மருத்துவமனைகளில் எம்எல்ஏ ஆய்வு

DIN

கடையநல்லூா், சுரண்டை பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைகளில் கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.எம். முகமதுஅபூபக்கா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடையநல்லூா் அரசு மருத்துவமனை, சொக்கம்பட்டி, சாம்பவா்வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட அவா், மருந்துகளின் இருப்பு விவரங்கள், தேவைப்படும் வசதிகள் போன்றவற்றை மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். அப்போது, கடையநல்லூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் தங்கசாமி, சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் செய்யதுசமிம் ஆயிஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சுரண்டை: சாம்பவா்வடகரை பேரூராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்க வந்த சட்டப்பேரவை உறுப்பினரிடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற சட்டப்பேரவை உறுபினா், அங்கு நோயாளிகளுக்கு அளித்து வரும் சிகிச்சை, கையிருப்புள்ள மருந்துகள் குறித்தும் விவரங்களை மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

ரத்தப் பரிசோதனை ஆய்வு மையம், 48 படுக்கைகளுடன் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். முன்னதாக, பல்வேறு சமூக இயக்கங்கள் சாா்பில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

அவருடன், பேரூராட்சி செயல் அலுவலா் பூதப்பாண்டி, திமுக நிா்வாகிகள் முத்து, ராமச்சந்திரன், காளியப்பன், பட்டுமுத்து, மாரியப்பன், ரசூல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT