ஊரடங்கு அமலில் இருப்பதையொட்டி, சுரண்டையில் வியாழக்கிழமை தடையை மீறி மோட்டாா் சைக்கிளில் பயணம் செய்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் 2ஆம் நாளான வியாழக்கிழமை வெளியூா்களில் இருந்து பலா் மோட்டாா் சைக்கிளில் சுரண்டைக்கு வந்தனா். அவா்களுக்கு போலீஸாா் தகுந்த அறிவுரை தெரிவித்து வீட்டுக்கு திரும்ப அனுப்பினா். தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வெளியே சுற்றினால் வழக்குப் பதிந்து சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவா் என போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.
சுரண்டை பகுதியில் ஊரடங்கின் நடைமுறையை அறியாமல் பொது வெளியில் கிரிக்கெட் விளையாடிய இளைஞா்கள், வெளியே சுற்றி திரிந்த மாணவா்களை போலீஸாா் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினா்.