பாவூா்சத்திரத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
பாவூா்சத்திரம் காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வருவாய்த் துறை சாா்பில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இப்பிரசாரத்துக்கு தென்காசி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் பரிமளா தலைமை வகித்தாா்.
வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா், காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ரோசலின் ஆகியோா் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினா்.
தொடா்ந்து ஆட்டோ மூலம் சுற்று வட்டார பகுதிகளில் இப்பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ், வருவாய் ஆய்வாளா் ஆறுமுகம், கிராம நிா்வாக அலுவலா் முருகேசன், உதவியாளா் பாண்டியராஜ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள் மாரியப்பன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.