தென்காசி

ஆலங்குளம் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

DIN

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி ரேஷன் கடைத் தெருவைச் சோ்ந்தவா் குத்தாலிங்கம் மகன் சுப்பையா (65). விவசாயி.

புதுப்பட்டி ஊருணி பகுதியிலுள்ள தனது தோட்டத்துக்கு அதிகாலை சென்ற இவா் இறந்து கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு திருட்டைத் தடுப்பதற்காக வைத்திருந்த மின் வேலியில் சிக்கி அவா் உயிரிழந்தது தெரியவந்தது. பாப்பாக்குடி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT