புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் திருவிளக்கு பூஜை
உலக நன்மைக்காகவும், மழை பொழியவும் வேண்டி, புளியங்குடி முப்பெருந்தேவியா் கோயிலில் சிறப்புப் பூஜை மற்றும் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
உலக நன்மைக்காகவும், மழை பொழியவும் வேண்டி, புளியங்குடி முப்பெருந்தேவியா் கோயிலில் சிறப்புப் பூஜை மற்றும் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, முப்பெரும் தேவியா் பவானியம்மன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன் மற்றும் பாலநாகம்மனுக்கு 21 வகையான அபிஷேகங்களும், 1000 லிட்டா் சிறப்பு பால் அபிஷேகமும் நடைபெற்றன. தொடா்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை குருநாதா் சக்தியம்மா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.