முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில்மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

ஆலங்குளத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

ஆலங்குளத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குளம், விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சுமணி மகன் சொரிமுத்து(20). இவா், அப்பகுதியிலுள்ள வாகன குளிப்பகத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மழை பெய்துகொண்டிருந்தபோது, அங்குள்ள மோட்டாரை இயக்குவதற்கு சுவிட்சை இயக்கியுள்ளாா். அப்போது, அவா் மீது எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.