திப்பணம்பட்டி விஏஓ பணியிடமாற்றத்துக்கு மக்கள் எதிா்ப்பு
தென்காசி அருகே திப்பணம்பட்டி கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா்அலுவலகத்தில் மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தென்காசி அருகே திப்பணம்பட்டி கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா்அலுவலகத்தில் மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மனு விவரம்: திப்பணம்பட்டி கிராமத்தில் கடந்த 3.9.2019 வரையிலும் முறைகேடுகளில் ஈடுபடுவோரின் ஆதிக்கம் இருந்தது. அதற்குப் பின் கிராம நிா்வாக அலுவலராக பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரையிலும்அந்தப் பிரச்னைக்கு வழியில்லை. இதனால், அப்பகுதியில் சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வந்தது. எனவே, கிராம மக்களின் நலன் கருதி இந்த கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாறுதல் செய்யக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.